Pages

Sunday, June 7, 2015

உள்ளது நாற்பது - 30

 
 
உருப்பற்றி யுண்டா முருப்பற்றி நிற்கு
முருப்பற்றி யுண்டுமிக வோங்கு - முருவிட்
டுருப்பற்றுந் தேடினா லோட்டம் பிடிக்கு
முருவற்ற பேயகந்தை யோர்.

உருப்பற்றி உண்டாம் உருப்பற்றி நிற்கும்
உருப்பற்றி உண்டுமிக ஓங்கும் - உரு விட்டு
உருப்பற்றும் தேடினால் ஓட்டம் பிடிக்கும்
உருவற்ற பேய்அகந்தை ஓர்.


பேய்க்கு உருவமில்லை. அது போலவே அகந்தைக்கும் உருவமில்லை. அது உருவுள்ள ஒரு உடலைப்பற்றியே எழ இயலும். இதை பற்றிக்கொண்டேதான் நிற்கவும் முடியும். ஐம்புலன்களால் இன்ப துன்பங்களை உண்டு அவற்றில் வாசனையால் மிகவும் வளரும். ஒரு உடலை விடும் காலத்தில் இன்னொரு உடலை பிடித்துக்கொள்ளும். இந்த அகந்தை உதிக்கும் இடம் எது என ஆராய்ந்தால் மறைந்துவிடுகிறது. இந்த நான் யார் விசாரத்தால் அகந்தை அழிகிறது என்பது ஞானிகளின் அனுபவமாகும். மனதே அகந்தை; மனது வாசனைகளின் வடிவமே.


रूपोद्भवो रूपततिप्रतिष्ठो रूपाशनो धूतगृहीतरूपः ।
स्वयं विरूपः स्वविचारकाले धावत्यहङ्कारपिशाच एषः ॥ २७ ॥

ரூபோத்³ப⁴வோ ரூபததிப்ரதிஷ்டோ² ரூபாஶனோ தூ⁴தக்³ருʼஹீதரூப: |
ஸ்வயம்ʼ விரூப: ஸ்வவிசாரகாலே தா⁴வத்யஹங்காரபிஶாச ஏஷ: || 27 ||


No comments: