Pages

Wednesday, June 17, 2015

உள்ளது நாற்பது - 33


 
எழும்பு மகந்தை யெழுமிடத்தை நீரில்
விழுந்த பொருள்காணவேண்டி - முழுகுதல்போற்
கூர்ந்தமதி யாற்பேச்சு மூச்சடக்கிக் கொண்டுள்ளே
யாழ்ந்தறிய வேண்டுமறி.
எழும்பும் அகந்தை எழும்இடத்தை நீரில்
விழுந்த பொருள் காணவேண்டி - முழுகுதல்போல்
கூர்ந்த மதியால் பேச்சு மூச்சு அடக்கிக்கொண்டு உள்ளே
ஆழ்ந்துஅறிய வேண்டும் அறி.


நீரில் விழுந்த பொருளை காண்பதற்கு எப்படி பேச்சு மூச்சடக்கி முழுகி தேடுவோமோ அதுபோல நானென்னும் அகந்தை எழும் இடத்தை காண பேச்சு மூச்சடக்கி இதயத்தின் உள்ளே ஆழ்ந்து முழுகி நுட்பமான மதியால் அறிய வேண்டும்.


कूपे यथा गाढजले तथान्त- र्निमज्ज्य बुद्ध्या शितया नितान्तम् ।
प्राणं च वाचं च नियम्य चिन्वन् विन्देन्निजाहङ्कृतिमूलरूपम् ॥ ३० ॥

கூபே யதா² கா³ட⁴ஜலே ததா²ந்த- ர்னிமஜ்ஜ்ய பு³த்³த்⁴யா ஶிதயா நிதாந்தம் |
ப்ராணம்ʼ ச வாசம்ʼ ச நியம்ய சின்வன் விந்தே³ன்னிஜாஹங்க்ருʼதிமூலரூபம் || 30 ||


 

No comments: