Pages

Friday, June 5, 2015

அடியார்கள் - டி.பி.ராமசந்திர ஐயர்


டி.பி.ராமசந்திர ஐயர் 1856 இல் ரயிலில் திருவண்ணாமலையிலிருந்து வேலூருக்குப் போய்க் கொண்டு இருந்தார். இந்த பெட்டியில் பி.வி, நரசிம்ம ஸ்வாமியும் உட்கார்ந்து இருந்தார். இருவரும் பால்ய நண்பர்கள். இருவரும் பேச ஆரம்பித்தனர்.
நரசிம்ம ஸ்வாமி பகவானிடம் இருந்தவர். அவருடைய சரித்திரத்தை முதன் முதலில் ஆங்கிலத்தில் எழுதியவர். பிறகு சீரடி சாய்பாபாவின் பரம பக்தரானார். பாபாவின் புகழை இந்தியா எங்கும் பரப்பினார். இந்த செயல் பகவானின் பக்தர்கள் மத்தியில் வியப்பூட்டியது. நரசிம்மசாமி பகவானிடம் வருவதும் இல்லை. 
டி.பி.ராமசந்திர ஐயர் நேரடியாக விஷயத்தை ஆரம்பித்தார்.
பகவான்கிட்டே பாடம் படிச்ச நீங்க எப்படி அவரை விட்டுட்டு சீரடி சாய்பாபா குருன்னு போனேளோ?”
நரசிம்மசாமி தயங்கியபடியே இதைத்தான் எல்லாருமே கேட்கறா. நான் பதில் சொல்லறது இல்லை. அது என்னோடவே போகட்டும்என்றார்.
நான் மத்தவா மாதிரியா? எங்கிட்டே சொல்லலாமே?” என்றார் ராமசந்திரஐயர்.
நரசிம்மசாமி மனம் திறந்து சொன்னார். பகவாந்தான் என்னை அங்கே போகச்சொன்னது!
ஒரு நாள் தனியா இருந்தப்ப நாமசங்கீர்த்தனத்துல எனக்கு இருந்த ஆர்வத்தை பகவான்கிட்டே சொன்னேன். அவர் சீர்டிக்குப்போ! சாய்பாபாதான் உனக்கு குரு. அவரோட சரித்திரத்தை எழுது. அவரோட புகழை இந்தியா முழுக்கப்பரப்பு. எல்லோருக்கும் தெரிய வை. உன் நேரத்தை இதுக்கே செலவு பண்ணு. ஆடறேன் பாடறேன் ந்னு நேரத்தை விரயம் பண்ணித்திரியாதே. முதல்ல சீரடிக்குக் கிளம்புன்னு சொன்னார். நானும் அவர் சொல்லறாரேன்னு சரின்னு சொன்னேன். ஆனா நடைமுறைக்கு கொண்டு வரலை. சீரடி சாய்பாபா 1918 லேயே விதேகமாயிட்டார். அவர் எனக்கு வழி எப்படி காட்டுவார்ன்னு தோணித்து. அதனால் பகவான் உத்திரவை பெருசா எடுத்துக்கலை.
பிற மகான்களைத் தேடிப் போனேன். என் எல்லாமுயற்சிகளும் தோல்வியிலேயே முடிஞ்சது. ஒரு நாள் அடுத்து என்ன செய்யறதுன்னு திகைச்சுக்கொண்டு நடு ரோடில்  இருக்கும்போது யாரோ ஒருவர் வந்து பக்கத்திலேதான் சீரடி; நீ அங்கே போய் பாபா சமாதியில் கும்பிடுந்னு சொன்னார்.
அவர் சமாதிக்கு முன் நின்னப்போ பகவான் சொன்னது காதிலே கேட்டது. என் வேலை என்னன்னு அப்பத்தான் புரிஞ்சது.
பகவான் எனக்குப் பண்ண பெரிய ஆசீர்வாதம் என்னை பாபாகிட்டே கொண்டு சேர்த்ததுதான். இது எனக்குத்தான் தெரியும். வேற யாரும் புரிஞ்சுக்க முடியாது.என்று கண்ணீருடன் கூறினார்.

ஒரு முறை பழைய ஹாலில் நரசிம்மசாமி பற்றிய ஏதோ பேச்சு நடந்த போது இந்த சர்ச்சையும் வந்தது.
பகவான் அவரோட ஆள்; அவர்கிட்டே போயிட்டார்என்று சொல்லி அதற்கு முற்றுப்புள்ளி வைத்தார்.


No comments: