Pages

Saturday, June 20, 2015

உள்ளது நாற்பது - 34

 
நானென்று வாயா னவிலாதுள் ளாழ்மனத்தா
னானென்றெங் குந்துமென நாடுதலே - ஞானநெறி
யாமன்றி யன்றிதுநா னாமதுவென் றுன்னறுணை
யாமது விசாரமா மா.
நான் என்று வாயால் நவிலாது உள் ஆழ்மனத்தால்
நான்என்று எங்குஉந்தும் என நாடுதலே - ஞானநெறி
யாம்அன்றி அன்றுஇது நானாம்அது என்றுஉன்னல்துணை
யாம்அது விசாரம் ஆமா.


உடலை நான் என்று எண்ணாமல் இருப்பதுடன் வார்த்தையாலும் சொல்லாமல் இருந்துகொண்டு நான் என்று அகந்தை எங்கிருந்து எழுகிறது என்று விசாரித்தலே ஞான மார்க்கமாகும். இப்படி இல்லாமல் நான் உடலல்ல; அந்த ஆன்மாவே என்று ஒரு இயல்பை ஆன்மாவுக்கு கற்பித்துக் கொண்டு த்யானித்தல் ஞான விசாரத்துக்கு ஒரு துணையாக இருக்கலாமே அன்றி அது ஞான விசாரமாகாது.


मौनेन मज्जन्मनसा स्वमूल- चर्चैव सत्यात्मविचारणं स्यात् ।
एषोऽहमेतन्न मम स्वरूप- मिति प्रमा सत्यविचारणाङ्गम् ॥ ३१ ॥

மௌனேன மஜ்ஜன்மனஸா ஸ்வமூல- சர்சைவ ஸத்யாத்மவிசாரணம்ʼ ஸ்யாத் |
ஏஷோ()ஹமேதன்ன மம ஸ்வரூப- மிதி ப்ரமா ஸத்யவிசாரணாங்க³ம் || 31 ||


 

No comments: