Pages

Saturday, June 13, 2015

உள்ளது நாற்பது - 32

 
நானுதியா துள்ளநிலை நாமதுவா யுள்ளநிலை
நானுதிக்குந் தானமதை நாடாம - னானுதியாத்
தன்னிழப்பைச் சார்வதெவன் சாராமற் றானதுவாந்
தன்னிலையி னிற்பதெவன் சாற்று.


நான் உதியாது உள்ள நிலை நாம்அதுவாய் உள்ளநிலை
நான்உதிக்கும் தானமதை நாடாமல் - நான் உதியாத்
தன் இழப்பைச் சார்வதுஎவன் சாராமல் தான்அதுவாம்
தன்நிலையில் நிற்பதெவன் சாற்று.


நான் என்னும் அகந்தை உதிக்காமல் இருக்கும் நிலையே நாம் ஆன்ம ஸ்வரூபமாக இருக்கும் நிலையாகும். நான் உதிக்கின்ற இடத்தை-ஸ்தானத்தை- விசாரித்து அதை அழித்தால் ஒழிய அது ஒழியாது. அப்படிச் செய்யாமல் நான், தான் என்பன மீண்டும் உதிக்காத நம் உண்மையான ஆன்ம நிலையை அடைவது எப்படி? அகந்தை நாசமாகாமல் தன் உண்மையான ஆன்ம நிலையில் நிற்பது எப்படி? சொல்வாயாக!


सत्या स्थितिर्नाहमुदेति यत्र तच्चोदयस्थानगवेषणेन ।
विना न नश्येद्यदि तन्न नश्येत् स्वात्मैक्यरूपा कथमस्तु निष्ठा ॥ २९ ॥

ஸத்யா ஸ்தி²திர்னாஹமுதே³தி யத்ர தச்சோத³யஸ்தா²னக³வேஷணேன |
வினா ந நஶ்யேத்³யதி³ தன்ன நஶ்யேத் ஸ்வாத்மைக்யரூபா கத²மஸ்து நிஷ்டா² || 29 ||


 

No comments: