Pages

Wednesday, June 10, 2015

உள்ளது நாற்பது - 31

 
அகந்தையுண் டாயி னனைத்துமுண் டாகு
மகந்தையின் றேலின் றனைத்து - மகந்தையே
யாவுமா மாதலால் யாதிதென்று நாடலே
யோவுதல் யாவுமென வோர்.
அகந்தை உண்டாயின் அனைத்தும் உண்டாகும்
அகந்தை இன்றேல் இன்றுஅனைத்தும் - அகந்தையே
யாவுமாம் ஆதலால் யாதுஇது என்றுநாடலே
ஓவுதல் யாவும்என ஓர்.


அகந்தை உண்டானால் எல்லாவித தோற்றங்களும் உண்டாகின்றன. அகந்தை இல்லை எனில் இந்த தோற்றங்கள் அனைத்தும் இல்லாமல் போகின்றன. ஆகையால் அகந்தையே எல்லாமுமாக உள்ளது. அகந்தையின் தன்மையை விசாரிக்க எல்லாம் மறைவதால் அதுவே எல்லாவற்றையும் துறப்பது என அறிவாயாக.

भावेऽहमः सर्वमिदं विभाति लयेऽहमो नैव विभाति किञ्चित्।
तस्मादहंरूपमिदं समस्तं तन्मार्गणं सर्वजयाय मार्गः ॥ २८ ॥

பா⁴வே()ஹம: ஸர்வமித³ம்ʼ விபா⁴தி லயே()ஹமோ நைவ விபா⁴தி கிஞ்சித்|
தஸ்மாத³ஹம்ʼரூபமித³ம்ʼ ஸமஸ்தம்ʼ தன்மார்க³ணம்ʼ ஸர்வஜயாய மார்க³: || 28 ||
 


 

No comments: