Pages

Monday, December 15, 2014

மகிழ்ச்சி! - 1




மகிழ்ச்சி!
அன்பு இருந்தா மகிழ்ச்சி தானே வராதா? வரும்.
ஆனா விசாரிச்சு பாருங்க. முக்காலே மூணு வீசம் பேர், தான் மகிழ்ச்சியா இல்லைன்னுதான் சொல்வாங்க.

எனக்கு ஒரு மெடிக்கல் சேல்ஸ் ரெப் நண்பர் இருக்கார். ஒரு தரம் நாயா பேயா அலைஞ்சுண்டு இருந்தார். ரொம்ப களைப்பா டென்ஷனோடஎன்னப்பான்னு விசாரிச்சேன்.  ஒண்ணுமில்லைஜி; கம்பனில டார்கெட் கொடுத்திருக்காங்க. கொஞ்சம் கஷ்டம்தான். ஆனா அசீவ் பண்ணியாச்சுன்னா நல்ல போனஸ் கிடைக்கும். சந்தோஷமா இருக்கலாம்.” ந்னார்.  ஓஹோ, ஆல் தெ பெஸ்ட்!” ந்னு சொன்னேன். ஒரு மாசம் கழிச்சு பார்க்கிறப்ப முன் மாதிரியேத்தான் ரொம்ப களைப்பா டென்ஷனோட இருந்தார். “என்னப்பா டார்கெட் அசீவ் பண்ணலையா?”ன்னு கேட்டேன்.
, அது பண்ணியாச்சு; பாராட்டி போனஸ் எல்லாம் அறிவிச்சுட்டு இப்ப திருப்பி அடுத்த டார்கெட் பிக்ஸ் பண்ணிட்டாங்கந்னார்.

இப்படித்தான் பல சமயம் ஆகிறது. ஆஹா, இது கிடைச்சுட்டா ஆனந்தம், ஆனந்தம், ஆனந்தமே ந்னு நினைக்கிறோம். ஆனா கிடைச்சப்பறம்தான் தெரியுது அந்த ஆனந்தம் ஷார்ட் லிவ்ட் ந்னு! பாழும் மனுஷ மனசுக்கு கிடைச்சதில திருப்தியா இருக்கத் தெரியறதில்லே. மேலே மேலேன்னு இன்னும் எதையாவது கேட்டுக்கிட்டேத்தான் இருக்கு. சந்தோஷம் என்கிறது ஒரு முடிவான நிலையா இல்லை!

பொதுவா ஒரு இலக்கை நிர்ணயிச்சு, கிடைக்க வேண்டிய சந்தோஷத்தை அதோட லிங்க் பண்ணாதீங்க! சந்தோஷம் அங்கே இல்லை!
அதாவது ஒரு நிலையில இருக்கோம். அங்கிருந்து உழைச்சு கஷ்டப்பட்டு ஒரு மேம்பட்ட நிலைக்கு வந்தாலும் இன்னும் மேம்பட்ட நிலைக்கு போகவே முயற்சி செய்துகிட்டு இருப்போம்; அதனால சந்தோஷம் வராது. அது எப்ப வரும்ன்னா முன்னே இருந்த நிலையோட இப்ப இருக்கிற மேம்பட்ட நிலையை யோசிச்சு பார்க்கிறப்பத்தான் வரும். ஆனா நம்ம ஃபோகஸ் அங்கே இருக்கறதில்லை. அதனால் எப்பவும் குறைஞ்சுகிட்டே இருப்போம். சந்தோஷம் இராது.

நான் பாஸ் பண்ண பிறகு சந்தோஷப்படுவேன்! நான் இருபதாயிரம் சம்பளம் வாங்க ஆரம்பிச்சபிறகு சந்தோஷப்படுவேன்! பிறகு, பிறகு… ஏன் சந்தோஷத்தை தள்ளிப்போட்டுக்கொண்டே இருக்கணும்? இப்ப சந்தோஷமா இருக்கறது எப்படின்னு பார்க்கலாமே?
எந்த காலக்கட்டத்திலேயும் இன்னைக்கு இருப்பதில இருந்து அடுத்து இங்கே போய் சந்தோஷமா இருக்கலாம்ன்னு நினைக்கிறதை விட இன்னைக்கு இப்படி இருக்கோம்; முன்னே அன்னைக்கு அப்படி இருந்தோம்ன்னு நினைச்சுப்பார்க்கிறதுல சந்தோஷம் இருக்கு! ஆமாம் சந்தோஷம் செய்நன்றி அறிவதிலத்தான் இருக்கு!

ஒருத்தன் இருந்தான். நல்ல ஆசாமி! பூர்வ ஜன்ம புண்ணியத்துல அவனுக்கு கடவுளோட நேரவே பேச முடிஞ்சது. ஒரு நாள் கடவுளே ந்னு கூப்டான். அவர் நேராவே வந்துட்டார். என்னப்பா வேணும்ன்னு கேட்டார். கேட்க எத்தனையோ இருக்க இவன் எனக்கு கல்யாணமே ஆகலை கொஞ்சம் கவனி ந்னு சொன்னான். சரி உனக்கு சீக்கிரம் கல்யாணம் ஆகும்ன்னார்; காணாம போயிட்டார்.

சீக்கிரமே கல்யாணமும் ஆயிடுத்து! நாளாச்சு; குழந்தை ஏதும் பிறக்கலை.
கடவுளேன்னான். அவரும் வந்தார். என்னப்பா வேணும்குழந்தையே பிறக்கலையேபிறக்கும். பிறந்தது. கொஞ்ச நாள் ஆச்சு. குழந்தை தவழவே இல்லை. கடவுளேஎன்ன வேணும்?... என் குழந்தை தவழணும்தவழும்.
கடவுளேஎன்ன வேணும்?... என் குழந்தை பேசவே மாட்டேங்கிறதே?… பேசும்.
கடவுளேஎன்ன வேணும்?... என் குழந்தை நடக்கவே மாட்டேன்கிறதேநடக்கும்.
கடவுளேஎன்ன வேணும்?... என் பிள்ளை சரியா படிக்கறதே இல்லையே?… படிப்பான்.
கடவுளேஎன்ன வேணும்?... என் பிள்ளைக்கு உடம்பு சரியில்லையே? நோய் நொடி ரொம்ப தொந்திரவு செய்யுதே? நோய் போயிடும்.
இப்படியே வாழ்க்கை போய்க்கொண்டு இருந்து. ஒரு நாள் ..
கடவுளேஎன்ன வேணும்?... என் பிள்ளைக்கு கல்யாணமே ஆகலையே!
ஒரு ஃபுல் ரௌண்ட் வந்தாச்சு!

குறைகள் எப்பவும் இருந்து கொண்டேதான் இருக்கும். சந்தோஷம் வேணும்ன்னா நல்லது கெட்டது ரெண்டுமே வாழ்க்கையில் எப்பவும் இருக்கும்ன்னு தெரிஞ்சு புரிஞ்சு கொண்டு நல்லதையே ஃபோகஸ் பண்ணி பார்க்க கத்துக்கணும்!
 - தொடரும்


No comments: