Pages

Tuesday, December 23, 2014

இந்த நாள் நல்ல நாள்!




அடுத்த படி?
எதிர்காலம் எப்படி இருக்கணும்ன்னு யோசிச்சாச்சு இல்லையா? இப்ப கொஞ்சம் ’நிகழ் எதிர்கால’த்துக்கு வருவோம்! அதாவது இன்னைக்கு! பொதுவா சந்தோஷமா இருக்க ஒத்தருக்கு தான் தன் வாழ்க்கையில் ஒரு கண்ட்ரோல்ல இருக்கறா மாதிரி நினைக்கிறது அவசியம். நாம் கண்ட்ரோல்ல இருக்கிறது நிச்சயமா உண்மையில்லைன்னு ஆன்மீக அடிப்படையில் நான் நினைச்சாலும் இந்த தொடர் எதை ஒட்டி எழுதப்படுதோ அதுக்கு நேர் மாறா எழுத முடியாது என்கிறதால இப்படி சொல்லலாம். “பொதுவா சந்தோஷமா இருக்க ஒத்தருக்கு தான் தன் வாழ்க்கையில் ஒரு கண்ட்ரோல்ல இருக்கறா மாதிரி ஒரு ப்ரமை இருப்பது அவசியம்.” 
ரைட்! அது எதுவா இருந்தாலும்…. அப்படி ஒரு நினைப்பு அவசியம்!

இதை வெச்சு சில விஷயங்கள் இஞ்சினீயர்கள் செஞ்சு இருக்காங்கன்னு தெரியுமா?
இந்த மாதிரி உங்களுக்கு நடந்து இருக்கா? நீங்க மிந்தூக்கில - லிப்ட்ல - போறிங்க. அது ஒரு தளத்துல நிக்குது. ஆனா யாரும் உள்ளே வரலை; வெளியெ போகலை. நமக்கு ஒரு மாதிரி ஆயிடும். இது ஏன் இப்படி நடக்குதுங்கறது வேற விஷயம். யாரேனும் மிந்தூக்கியை அழைக்க பட்டனை அழுத்திட்டு காத்திருக்காம போயிருக்கலாம்… விடுங்க. நாம் இந்த நிலையில என்ன செய்வோம்? க்ளோஸ் டோர் ந்னு போட்டு இருக்கிற பட்டனை அழுத்துவோம். அது கொஞ்ச நேரத்துல மூடிக்கும். ஆனா இந்த பட்டன் ஒரு டம்மி! இதை அமுக்கி கதவை மூட முடியாது! இப்படி இல்லைன்னா நாம என்ன செய்வோம்? நமக்கு அவசரம். ஒவ்வொரு தளத்துல்கேயும் நின்னு போனா நாம எப்ப போய் சேருகிறது? நடுவில நிக்காம நாம் நம்ம தளத்துக்கு போகணும்ன்னு மிந்தூக்கி தளத்துல நின்னு திறக்க ஆரம்பிச்ச உடனே இந்த பட்டனை அழுத்தி கதவை மூடி மேலே போக முடியுமான்னு பார்ப்போம். நாம யாரு! அக்காங்!
பின்ன எதுக்கு இந்த பட்டன்? அது இல்லைன்னா நாம் பயந்துடுவோம். மிந்தூக்கி தானியங்கியா சில நொடிகளில கதவை மூடிக்கொண்டு மேலே பயணிக்கும்ன்னாலும் கதவை மூட நம்மால முடியும்ன்னு மிந்தூக்கில இருக்கிறவர் நினைக்கிறது முக்கியம். அதாவது நிம்மதியா இருக்க தான் கண்ட்ரோல்ல இருக்கிறதா நினைக்கறது முக்கியம்.

அதனால், கண்ட்ரோல்ல்ல இருக்க, இன்னைக்கு நம் நாள் எப்படி இருக்கப்போகிறதுன்னு ஒரு கற்பனை செய்யலாம். நீங்க இரவு இந்த பயிற்சியை செய்வதானால் நாளைக்கு நம் நாள்ன்னு நினைச்சுக்கோங்க. காலை செய்வதானால் இருந்தா இன்னைக்கு ந்னு நினைச்சுக்கோங்க!  

காலை சரியான நேரத்துக்கு எழுந்திருக்கிறோம். மனப்பயிற்சிகளை எல்லாம் முடிக்கிறோம். காலை கடன்களை எல்லாம் அருமையா சீக்கிரம் முடிக்கிறோம். காலை செய்தித்தாள்ள நல்லா செய்தியாவே கண்ணுல படுது! (கொஞ்சம் டூ மச் இல்லே? போகட்டும்) அடடா! அருமையான காலை டிபன், காபி/ டீ…. அஹா! இதை முன்னேயே போன பதிவுகளில பாத்துட்டோம் இல்லையா? இருந்தாலும் இங்கே முழுமைக்காக எழுதலாம். நினைவு இருக்கிறவங்க இந்த பாராவை விட்டுடலாம். ஆபீஸுக்கு அதிக ட்ராபிக் இல்லாத சாலையில் போகிறோம். சிக்னல் எல்லாம் நமக்கு சாதகமாவே இருக்கு; ஆபீஸ்ல வேலையை ஜம்ன்னு ஊதி தள்ளறோம். மதிய சாப்பாடு காண்டீன்லஅடடா இன்னைக்கு சமையல்காரர் அருமையாவே சமைச்சு இருக்கார். நேரத்துக்கு சுடச்சுட கிடைக்குது! முடிஞ்சு வந்து தூங்காம நம் அடுத்த வேலையை கவனிக்கிறோம்; சக ஊழியர்களோட பயன் தரும் உரையாடல்கள் நடக்குது. எல்லா வேலையையும் சீக்கிரம் முடிச்சுட்டு டாண் ந்னு அஞ்சு மணிக்கு வீட்டுக்கு கிளம்பறோம். திருப்பியும் பிரச்சினை இல்லாத பயணம்; வீட்டுக்கு வந்து குழந்தைகளை கொஞ்சி விட்டு விளையாடி விட்டு அருமையான இரவு உணவை சாப்பிட்டு விட்டு நிம்மதியா தூங்கப்போறோம்.

ஒரு சின்ன விஷயம். நம்ம நாள் தோறும் செய்கிற செயல்கள் நம்மோட மூணு வருஷத்தில எப்படி இருப்போம்ன்னு கற்பனை செய்ததோட இசைவுடன்  இருக்கணும் இல்லே? ரைட்! அதை மறந்திருப்பீங்களோன்னு நினைச்சேன்!

இப்படி ஒரு அருமையான நாள் கழியுது. அடுத்த நாள் மீண்டும் இதுவே. இப்படி ஒரு வாரம் கழியும். நாலு வாரங்கள் சேர்ந்து ஒரு வருஷம்! பன்னிரண்டு மாதங்கள் சேர்ந்து ஒரு வருடம். இப்படியே போக வாழ்கை முழுதும் அருமையாவே இருக்கும்!

உங்கள் நாளை உங்க சௌகரியப்படி ஏழெட்டா பிரிச்சு அது எப்படி இருக்கும்ன்னு கற்பனை செய்யறதே பயிற்சி! 

அடுத்த பதிவோட முடிஞ்சிடும்!



No comments: