Pages

Monday, May 4, 2020

ஹரிஹர புத்ர ஸஹஸ்ர நாமாவளி - 34





ௐ நாக³ரத்நவிபூ⁴ஷிதாய நம: ।நாகரத்தினங்களால் அலங்கரிக்கப்பட்டவனே
ௐ வாசஸ்பதயே நம: ।சொற்களுக்கு அதிபதியே
ௐ புராராதயே நம: ।முப்புரங்களின் எதிரியே
ௐ ஸம்வர்த்தாய நம: ।நாசம் செய்பவனே
ௐ ஸமரேஶ்வராய நம: ।போர்களுக்கு அதிபதியே
ௐ உருவாக்³மிநே நம: ।நிறைய பேசுபவனே
ௐ உமாபுத்ராய நம: ।உமாவின் புத்திரனே
ௐ உடு³லோகஸுரக்ஷகாய நம: ।நக்‌ஷத்திர உலகங்களை காப்பவனே
ௐ ஶ்ருங்கா³ரரஸஸம்பூர்ணாய நம: ।சிருங்கார ரஸம் நிறைந்தவனே
ௐ ஸிந்தூ³ரதிலகாங்கி³தாய நம: । 810சிந்தூர திலகம் தாங்கியவனே
ௐ குங்குமாங்கி³த ஸர்வாங்கா³ய நம: ।உடல் முழுதும் குங்குமம் பூசியவனே
ௐ காலகேயவிநாஶாய நம: ।காலகேயர்களை அழித்தவனே
ௐ மத்தநாக³ப்ரியாய நம: ।மதம் கொண்ட யானையை விரும்புபவனே
ௐ நேத்ரே நம: ।கண்களே
ௐ நாக³க³ந்த⁴ர்வபூஜிதாய நம: ।நாக கந்தர்வர்களால் பூசிக்கப்பெற்றவனே
ௐ ஸுஸ்வப்நபோ³த⁴காய நம: ।நற்கனவுகளை தோற்றுவிப்பவனே
ௐ போ³தா⁴ய நம: ।அறிவே
ௐ கௌ³ரீது:³ஸ்வப்நநாஶநாய நம: ।கௌரியின் கெட்ட கனவை நாசம் செய்பவனே
ௐ சிந்தாராஶிபரித்⁴வம்ஸிநே நம: ।கவலைக்கூட்டத்தை சுற்றிலும் அழிப்பவனே
ௐ சிந்தாமணிவிபூ⁴ஷிதாய நம: । 820சிந்தாமணியால் அலங்கரிக்கப்பட்டவனே
ௐ சராசரஜக³த்ஸ்ரஷ்டே நம: ।சராசர உலகை ஸ்ருஷ்டித்தவனே
ௐ சலத் குண்ட³லகர்ணயுகே³ நம: ।அசையும் காதணிகளை கொண்டவனே
ௐ முகுராஸ்யாய நம: ।கண்ணாடி போன்ற முகத்தை உடையவனே
ௐ மூலநித⁴யே நம: ।மூல நிதியே
ௐ நிதி⁴த்³வயநிஷேவிதாய நம: ।இரு நிதிகளால் போற்றப்படவனே

   சிதம்பரம் ப்ரம்ம ஸ்ரீ கே.யம். இராஜ கணபதி தீஷிதர் பாஷ்யம்:
 
804. நாகரத்ன விபூஷித : நாகரத்தினம் அணிந்தவன்.
805. வாசஸ்பதி : வாக்குகளுக்கு அதிபதி.
806. புராராதி: முப்புரங்களுக்குச் சத்துருவானவன்.
807. ஸம்வர்த: ப்ரளய காலன்.
808. ஸமரேச்வர: யுத்தங்களுக்கு அதிபதி
809. உருவாக்மீ : பெரிய பேச்சாளன்.
810. உமாபுத்ர : உமையின் புதல்வன்
811. உடுலோக ஸுரஷக: நக்ஷத்திர உலகைக்காப்பவன்.
812. ச்ருங்கார ரஸ சம்பூர்ண : சிருங்கார ரஸம் நிறைந்தவன்.
813. ஸிந்தூர திலகாங்கித: ஸிந்தூரப் பொட்டு அணிந்தவன்,
814. குங்குமாங்கித ஸர்வாங்க: குங்குமத்தை எல்லா அவயவங்களிலும் தரித்தவன்.
815. காலிகேய விநாசன: காலிகேயன் என்னும் சர்ப்பம் அல்லது காலிகேயன் என்னும் அரக்கன் இவைகளை ஸம் ஹரித்தவன்.
816. மத்த நாகப்ரிய: மதம் உள்ள யானையிடம் பிரியம் உள்ளவன்.
817. நீத: அடைவிப்பவன்.
818. நாக கந்தர்வ பூஜித: நாகர்கள், கந்தர்வர்களால் புஜிக்கப்பட்டவன்.
819. ஸுஸ்வப்ன போதக : நல்ல கனவில் அடியவர்களுக்கு நன்மை போதிப்பவன்.
820. போதம் : விழிப்பு நிலையில் உள்ளவன். அதாவது ஞான நிலை உருவன்.
821. கௌளி துஸ்வப்ன நாசன: பல்லியின் கனவால் உண்டாகும் படையைப் போக்குபவன்.
822. சிந்தாராஸி பரித்வம்ஸ: மனக்கவலைகளை அகற்றுபவன்.
823. சிந்தாமணி விபூஷித: விரும்பியதை அளிக்கும் திறன் வாய்ந்த சிந்தாமணி என்னும் ரத்தினம் அணிந்தவன்.
824. சராசர ஜகத் ஸ்ரஷ்டா : அசைவதும் அசையாததுமான பொருள்களை உடைய உலகத்தை சிருஷ்டித்த அப்பன்.
825. சலத் குண்டல கர்ணயுக் : ஆடுகின்ற குண்டலங்கள் பூண்ட காதுகளை உடையவன்.
826. முகுராஸ்ய: கண்ணாடி போன்ற முகம் உடையவன்.
827. மூலநிதி : கருவூலன். பொக்கிஷதாரன். மூலன் என்ற சித்தனால் நிதிபோல் அமைக்கப் பெற்றவன்.
828. நிதித்வய நிஷேவித: சங்கம் பதுமம் என்கிற இரண்டு நிதிகளால் போற்றப்பட்டவன்

No comments: