Pages

Friday, May 8, 2020

ஹரிஹர புத்ர ஸஹஸ்ர நாமாவளி - 38






ௐ ஆம்நாயப²லதா³யகாய நம: ।
வேத/ தந்த்ர சாத்திரங்களில் கூறப்படுள்ள பலன்களை தருபவனே
ௐ த்⁴ருʼதாக்ஷஸூத்ரபாணயே நம: ।ருத்ராக்ஷ மாலையை கையில் ஏந்தியவனே
ௐ அக்ஷிரோக³விநாஶநாய நம: ।கண் நோய்களை நாசம் செய்பவனே
ௐ முகுந்த³பூஜ்யாய நம: ।முகுந்தனால் கௌரவிக்கப்பட்டவனே
ௐ மோஹாங்கா³ய நம: ।
மோகத்தை உண்டு செய்யும் அங்கங்களை உடையவனே
ௐ முநிமாநஸதோஷிதாய நம: ।முனிவர்களை மனதுக்கு திருப்தி அளிப்பவனே
ௐ தைலாபி⁴ஷிக்தஸுஶிரஸே நம: ।
தைலங்களால் அபிஷேகம் செய்யப்பட்ட தலையை உடையவனே
ௐ தர்ஜநீமுத்³ரிகாயுதாய நம: ।
ஆட்காட்டி விரல் (அதிகார) முத்திரையை காட்டுபவனே
ௐ தடாதகாமந:ப்ரீதாய நம: ।மீனாட்சியின் மனதுக்கு பிடித்தவனே
ௐ தமோகு³ணவிநாஶநாய நம: । 910தமோகுணத்தை நாசம் செய்பவனே
ௐ அநாமயாய நம: ।பிணியற்றவனே
ௐ அநாத³ர்ஶாய நம: ।தர்சிக்க இயலாதவனே
ௐ அர்ஜுநாபா⁴ய நம: ।தங்க நிறத்தோனே
ௐ ஹுதப்ரியாய நம: ।ஹோமங்களை விரும்புகிறவனே
ௐ ஷாட்³கு³ண்யபரிஸம்பூர்ணாய நம: ।அறுகுணத்தோனே
ௐ ஸப்தாஶ்வாதி³க்³ரஹைஸ்துதாய நம: ।
ஏழு குதிரையோன் (சூரியன்) முதலான கிரகங்களால் துதிக்கப்பட்டவனே
ௐ வீதஶோகாய நம: ।சோகமற்றவனே
ௐ ப்ரஸாத³ஜ்ஞாய நம: ।தியானத்தில் இருப்பவனே
ௐ ஸப்தப்ராணவரப்ரதா³ய நம: ।எழுவருக்கு ப்ராண வரம் அளித்தவனே
ௐ ஸப்தார்சிஷே நம: । 920அக்னி உருவினனே
ௐ த்ரிநயநாய நம: ।முக்கண்ணனே
ௐ த்ரிவேணீப²லதா³யகாய நம: ।திரிவேணி (ஸ்நான) பலனை அளிப்பவனே
ௐ க்ருʼஷ்ணவர்த்மநே நம: ।கருத்த இமைகளை கொண்டவனே
ௐ வேத³முகா²ய நம: ।வேதம் ஓதுபவனே
ௐ தா³ருமண்ட³லமத்⁴யகாய நம: ।அடர்ந்த மரங்கள் மத்தியில் இருப்பவனே

  சிதம்பரம் ப்ரம்ம ஸ்ரீ கே.யம். இராஜ கணபதி தீஷிதர் பாஷ்யம்:
 
 
903. ஆம்நாய பலதாயக: வேதத்தில் கூறப்பட்டுள்ள பலங்களை அளிப்பவன்.
904. அக்ஷஸுத்ர த்ருதபாணி: ருத்ராக்ஷ மாலையைக் கையில் தரித்தவன்.
905. அக்ஷிரோக விநாசன: கண்களின் நோயைக் போக்கடிப்பவன் (த்ருஷ்டி தோஷத்தை அகற்றுபவன்)
906. முகுந்த புஜ்ய: முகுந்தனால் பூஜிக்கப்பட்டவன்.
907. மோஹாங்க: மோகத்தை உண்டு பண்ணும் அங்கங்களை அல்லது சேனைகளை உடையவன்.
908. முனிமானஸ தோஷித: முனிவர்களின் மனத்திற்கு சந்தோஷத்தை அளிப்பவன்.
909. தைலா பிஷிக்த ஸுசிரா : எண்ணையால் அபிஷேகம் செய்யப்பட்ட தலையை உடையவன்.
910. தர்ஜனி முத்ர தர்சன :அதிகார முத்திரையைக் காண்பிப்பவன்.
911. தடாத காமனப்ரீத : ஸ்ரீமீனாக்ஷி தேவியின் மனதுக்குப் பிரியமானவன்.
912. தமோகுண விநாசன: தமோ குணத்தைக் கண்டிப்பவன்.
913. அநாமய: பிணி இல்லாதவன்.
914. அநாதர்ச: பார்க்க முடியாதவன்.
915,916. அர்ஜுனாப ஹுதப்ரீய : வெண் சங்கத்தில் பிரியம் உள்ளவன்.
917. ஷாட்க்குண்ய பரிஸம்பூர்ண : ஸந்தி, விக்ரஹம், யானம், ஆவனம் த்வைதம், ஆச்ரயம் என்று மனுவினால் ராஜந்தியில் கூறப்பட்டுள்ள ஆறுவித குணங்களால் நிறைந்தவன்.
918. ஸப்தாச் வாதி கிரஹைஸ்துத : சூரியன் முதலிய கிரஹங்களால் போற்றப்பட்டவன்.
919. வீத சோக: சோகமற்றவன்.
920. பிரஸாதக்ஞ: அனுராகம் அறிந்தவன்
921. ஸப்தப்ராண வரப்ரத : ஸப்த ரிஷிகளுக்கும் ப்ராணதாரணா யோகவரம் அளித்தவன்.
922. ஸப்தார்ச்சி : அக்னி உருவமானவன்.
923. த்ரிநயன: மூன்று கண்களை உடையவன்.
924. த்ரிவேணி பலதாயக : கங்கை, யமுனை, சரஸ்வதி என்ற மூன்று நதிகளின் ஸங்கமத்தில் ஸ்நானம் செய்வதால் ஏற்படும் பலனை அளிப்பவன் (சபரிமலை யாத்ரா மார்க்கத்தில் கங்கையை ஒத்த பம்பா நதியும் யமுனையை ஒத்த கல்லாறும் கலக்கும் இடத்தில் அந்தர் வாகினியாக சரஸ்வதியும் சேர்ந்து ஒர் திரிவேணி ஸங்கமம் ஏற்படுகிறது. திரிவேணி ஸ்நான பலன் இங்கு ஸ்நானம் செய்தாலும் கிடைப்பதாக பெரியோர்கள் கூறுவர்.
925. க்ருஷ்ண வர்மா: கருத்த சட்டை அணிந்தவன்.
926. வேதமுக: வேதம் ஒதுபவன், நான்கு முகம் உள்ளவன்.
927. தாருமண்டல மத்யக: மரங்கள் அடர்ந்த இடத்தில் இருப்பவன்.

No comments: