Pages

Friday, May 17, 2013

யக்ஷப்ப்ரச்னம் - 11

 
91. கே: ஸாது எனக்குறிப்பிடக்கூடியவன் யார்?
: எல்லாப்பிராணிகளுக்கும் நன்மை செய்பவன்.

92. கே: அஸாது எனக்குறிப்பிடக்கூடியவன் யார்?
:தயை என்ற குணமற்றவன்.

93. கே: மோஹம் என்றாலென்ன?
: தர்மத்தில் அறிவில்லாமை.

94. கே:மானம் என்றால் எது?
: தானே பெரியவன் என்ற அஹங்காரத்துடன் இருத்தல்.

95. கே: “ஆலஸ்யம்" (சோம்பல்) என்று எதை கருத வேண்டும்?
: தர்மத்தை அனுஷ்டிக்காமல் இருத்தலே சோம்பலாம்.

96. கே: சோகம் என்பதென்ன?
: அறியாமையே சோகம்.

97. கே: “ஸ்தைர்யம்" (உறுதி) என்பதென்ன?
: சொந்த தர்ம அனுஷ்டானத்தில் இருப்பதே ஸ்தைர்யம்.

98. கே: “தைர்யம்" என்றாலென்ன?
: இந்திரியங்களை அதனதன் விஷ்யங்களில் இருந்து திருப்புதலே தைர்யம்.

99. கே: “ஸ்நாநம்" என்றாலென்ன?
: மனதில் உள்ள அழுக்குகளை -காமம் குரோதம் ம்தலியவற்றை த்யாகம் செய்தலே ஸ்நாநம் ஆகும்.

100. கே: தானம் என்றாலென்ன?
: பூதங்களை ரக்ஷித்தலே தானம்.

No comments: