Pages

Thursday, March 27, 2014

ஶ்ரீ ஶ்யாமலா த³ண்ட³கம் - 10




मुग्धमन्दस्मितोदार-वक्त्रस्फुरत्-पूगतांबूलकर्पुरखण्डोत्करे !
ज्ञानमुद्राकरे ! सर्वसम्पत्करे ! पद्मभास्वत्करे ! श्रीकरे! 

முக்³த⁴மந்த³ஸ்மிதோதா³ரவக்த்ர- ஸ்பு²ரத் பூக³தாம்பூ³லகர்பூரக²ண்டோ³த்கரே ஜ்ஞானமுத்³ராகரே ஸர்வஸம்பத்கரே பத்³மபா⁴ஸ்வத்கரே ஸ்ரீ கரே 

முக்³த⁴ மந்த³ ஸ்மிதோதா³ர வக்த்ர- ஸ்பு²ரத் பூக³ தாம்பூ³ல கர்பூர க²ண்டோ³த்கரே ஜ்ஞான முத்³ரா கரே ஸர்வ ஸம்பத் கரே பத்³ம பா⁴ஸ்வத் கரே ஸ்ரீ கரே

அழகிய புன்சிரிப்பால் அலங்கரிக்கப்பட்ட உன் வாயில் பாக்கும் (பச்சைக்) கற்பூரமும் சேர்ந்த தாம்பூலமும் (நறுமணத்தை வளர்ப்பதாக) உள்ளது. உனது கையில் சின்முத்திரை விளங்குகிறது. (அத்தகைய ஞானத்தை விழையும் பக்குவம் இல்லாத பக்தர்களுக்கு) அனைத்து செல்வங்களை அளிப்பவளும் நீயே. (ஏனெனில்) உன் கையில் தாமரைப்பூ ஒளிர்கிறது; (ஆகையால் அதனை இருப்பிடமாகக் கொண்ட) மஹாலக்ஷ்மியே உன் கையில் இருக்கிறாள். (தாயே, உனக்கு வெற்றி உண்டாகுக!)


No comments: